புது மனைவியை பெல்ட்டால் அடித்து நைட்டியுடன் விரட்டிய கணவன்!

கோவை மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் புதுமனைவியை பெல்ட்டால் அடித்து நைட்டியுடன் கணவன் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த சார்லஸ் என்பவர் கல்லுரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த சௌமியா(32) என்பவரை காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் சௌமியாவின் வீட்டிற்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சௌமியா, சார்லஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு சார்லஸின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் சௌமியாவின் இளம்வயது குறித்து சார்லஸ் கேட்டறிந்துள்ளார். ஆர்வ மிகுதியில் பேசிய சௌமியா, கணவன் எதுவும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார் என நினைத்து தன்னுடைய காதல் தோல்வி குறித்தும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த சார்லஸ், சௌமியாவை பெல்ட்டால் அடித்து திருமணத்திற்கு செலவு செய்த ரூ.2 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கிவருமாறு கூறி விரட்டியடித்துள்ளார்.

அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிவந்த சௌமியா வழியில் ஒருவருடைய செல்போனை வாங்கி வீட்டிற்கு போன் செய்தார். உடனே அவருடைய பெற்றோரும் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சௌமியா தன்னுடைய கணவர் மீது நடவடிக்கைக்கு எடுக்குமாறு கூறியுள்ளார்.