தமிழ் சினிமாவில் தற்போது ஒரே நேரத்தில் பல ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்து வருபவர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன்.
சமீபத்தில் அவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. ஒரே நேரத்தில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்து படங்கள் எடுப்பது எப்படி என விசாரணை நடைபெற்றது.
விசாரணை வளையத்தில் நடிகர்கள்
இந்நிலையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களை விசாரணை வளையத்துக்குள் அமலாக்கத்துறை கொண்டு வந்திருக்கிறது.
அவர்கள் மட்டுமின்றி சினிமா பி.ஆர்.ஓ இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகிய இருக்கிறது.