ராணி உட்பட அரண்மனை ஊழியர்களை பதற வைத்த வில்லியம்!

இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசனின் திருமணத்தின் போது, குட்டி இளவரசர் வில்லியமை பாதுகாப்பதற்காக ராணி பதறிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசனின் திருமணம் ஜூலை 23, 1986 இல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் அரச தம்பதியினர் குதிரை ரதத்தில் புறப்பட்டனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் கையசைத்து வழியனுப்பும் போது, குஷியில் 4 வயது மட்டுமே ஆகியிருந்த இளவரசர் வில்லியம் ரதத்திற்கு பின்னால் வேகமாக ஓட ஆரம்பித்தார்.

இதனை பார்த்து பதறிப்போன பிரித்தானிய ராணி, வருங்கால அரசர் மக்கள் கூட்டத்திற்குள் சிக்கிக்கொள்வாரோ என்கிற அச்சத்தில் வேகமாக ஓடி சென்று கையை பிடித்து நிறுத்தினார்.

ராணி ஓடுவதை பார்த்த ஊழியர்கள் அனைவரும் பதறியடித்து வேகமாக பின் தொடர ஆரம்பித்தனர். 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியினை தற்போது லாரா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிடப்பட்டதிலிருந்தே அரண்மனை ரசிகர்களால் அதிகமாக பகிரபட்டு வருகிறது.