நான் யாருடன் வசித்தால் உங்களுக்கு என்ன? சீறிய அமலாபால்

ஆடையில்லாமல் அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் இன்று(19ம் தேதி) ரிலீசாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அமலாபால்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுப்பதில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமலா பால் தனது காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அதனை உறுதி செய்திருக்கிறார் அவர். ஆனால் தான் யாருடன் அங்கு வசிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.

பாண்டிச்சேரியில் தனியாகவா இருக்குறீர்கள்? அல்லது வேறு யாரும் உங்களுடன் இருக்கிறார்களா? என பத்திரிக்கையாளர்கள் துருவி துருவி கேட்டதற்கு, நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும், வேறு யாருடன் இருந்தாலும், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என அமலா பால் ஆவேசமாக பதில் அளித்தார்.