வேயாங்கொட பகுதியில் பரீட்சைக்கு மகளை அழைத்துச் சென்றபோது புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.
வேயாங்கொட – வந்துரவௌ பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இந்தசம்வம் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.
வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.