மூதாட்டியின் வாயில் துணியை வைத்து பொத்தி கற்பழித்த சிறுவன்.!

நாம் வாழும் உலகத்தில் பல விதமான துயரம் நிறைந்த சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயர சம்பவங்களில் நாம் பெரும் அதிர்ச்சிக்கும்., ஆத்திரத்திற்கும் உள்ளாக்கும் விசமயமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் இருந்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜாமலாளிய கிராமத்தில் 80 வயதுடைய மூதாட்டி வசித்து வந்து கொண்டு இருந்தார். இவரின் இல்லத்தில் இரவு நேரத்தில் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தார். இந்த சமயத்தில்., இவர்களின் இல்லத்தில் 15 வயதுடைய உறவினரின் மகன் இருந்துள்ளான்.

இந்த நிலையில்., மூதாட்டி உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில்., பாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து., மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுமட்டுமல்லாது மூதாட்டி அபயக்குரல் எழுப்பவும் முடியாமல்., சிறுவனின் பிடியில் இருந்து தப்பவும் முடியாமல் இருந்துள்ளார்.

மூதாட்டியின் முனங்களை கேட்ட குடும்பத்தினர் பதறியடித்து வந்து பார்த்த சமயத்தில்., சிறுவன் பாட்டியை சீரழிப்பது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். காம கொடூர சிறுவனை கைது செய்து., அவனுக்கும் அடி பலம் என்பதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை அங்குள்ள பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.