தோல்வியுடன் ஓய்வை அறிவிக்கும் தோனி?

இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக இன்றும் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால் டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள்.

இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் நீஷமின் கண்மூடித்தனமான கேட்சில் ஆட்டமிழக்க, இந்தியா 24 ரன்கள் மட்டுமே எடுத்து, படு பாதாளத்தில் விழுந்தது.

இந்நிலையில் தான் இளம் வீரர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட் போலவே அவசரப்பட்டு சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.

7-வது விக்கெட் தான் உலக சாதனை ஜோடியாக அமைந்தது. தோனியுடன் இணைந்த ஜடேஜா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 59 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் அடித்தார். இறுதி நேரத்தில் அடிக்க வேண்டிய நெருக்கடியில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன்அவுட் ஆனார் தோனி அரைசத்துடன் வெளியேறினார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டி முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி, அணியின் செயல்பாடு குறித்து பேசினார். இறுதியாக தோனி ஒய்வு குறித்து கேள்வி எழுப்பிய போது, “இதுவரை அவருடைய எதிர்காலம் குறித்து தோனி எதுவும் எங்களிடம் பேசவில்லை” என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நாடு திரும்புவதற்குள் ஓய்வை அறிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.