இந்தியா, நியூலாந்து அணிகள் ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இது வரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தநிலையில், கடந்த வாரம் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடின அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை அணியை சேர்ந்த வீரர்கள் மைதானத்தில் விளையாடிக்கொண்டுருக்கும் போது, மைதானத்திற்கு மேலே பறந்த விமானத்தில் ”காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகம் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மீண்டும் ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு மைதானத்துக்கு மேலே வலம் வந்த அதே விமானத்தில் ”இனப்படுகொலையை இந்தியா நிறுத்துக…காஷ்மீரை சுதந்திரமாக்கு” என்ற வாசகம் அடங்கிய பேனர் பறந்தது. இதே போல அடுத்த 10 நிமிடத்துக்கு பிறகு போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தின் மேல மூன்றாவது முறையாக வலம் வந்த அதே விமானத்தில் ”இனப்படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும்” என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்திய இலங்கை போட்டியின் போது மூன்று முறை விமானம் வலம் வந்தது தொடர்பாக பிசிசிஐ அமைப்பு ஐசிசி க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இதுபோன்ற சம்பவங்களால் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்துஇன்று மற்றும் வரும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களின் போது மைதானங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.