இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று முன் தினம் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 337 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலர்களான புவனேஷ்வர், பும்ரா நேர்த்தியாக பந்துவீசினார்கள்.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பாக்கர் ஜமான் நிதானமாக விளையாடினார்கள். ரன்ரேட் பெரிதாக செல்லவில்லை என்றாலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 7 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசிக்கொண்டிருக்கும் போதே, ஆடுகளம் வழுக்கியதால் காயமடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அவர் காயம் பெரியதாக இருப்பின் இந்திய அணிக்கு நிச்சயமாக பின்னடைவாகவே இருக்கும். புவனேஷ்வர் வெளியேறியதால் அந்த ஓவரை நிறைவு செய்ய உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக களமிறங்கியுள்ள தமிழகத்தின் விஜய் ஷங்கர் அழைக்கப்பட்டார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெளியிட்ட அறிவிப்பில், தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார்.
புவனேஷ் குமாருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முகமது ஷமியின் பந்து வீச்சு முறை மிகவும் தனித்துவமானது.
புவனேஷ் குமார் இல்லாததால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் ஒரு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.