9 வயது மகனை 12 முறை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.!!

பிரேசில் நாட்டைச் சார்ந்த ரோசனா என்ற பெண்மணி (வயது 27) தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நிலையில்., கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக கணவர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இவர்களின் பிரிவிற்கு பின்னர் இவர்களின் ஐந்து வத்துடைய குழந்தையை தாயார் வளர்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., தற்போது அந்த சிறுவனுக்கு ஒன்பது வயதாகும் நிலையில்., பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசையானது வந்துள்ளது.

இந்த ஆசையை தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில்., அவர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சிறுவன் பெண்ணாக மாறும் எண்ணத்தில் இருந்து மாறாமல் இருந்ததால்., ஆத்திரமடைந்த தாயார் மகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி., மகனை சுமார் 12 முறை கத்தியால் குத்திய நிலையில்., மகனின் பிறப்புறுப்பு மற்றும் கண்களின் இமைகள் என அனைத்தையும் அறுத்து., மகனின் உடலின் சதைகளை சமைத்து சாப்பிட்டு., பின்னர் தலையை தனியாக அறுத்தெடுத்து., உடலை அங்குள்ள காட்டு பகுதியில் போட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., பின்னர் இதுகுறித்த மேற்கொண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.