ராஜராஜ சோழன் குறித்து ரஞ்சித் பேசிய விவகாரம்.! திமுக தலையீடா?

இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ராஜராஜ சோழனைப் பற்றி திரைப்பட இயக்குநர் பா இரஞ்சித் அவதூறாகப் பேசி இருப்பது ஏற்புடையது அல்ல.

மக்களும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆதாரம் ஏதுமில்லாமல் இதுபோன்ற கருத்துக்களை பரப்பாதீர்கள். தன்னிகரற்ற அரசனை இதுபோன்ற கருத்துகளைப் பேசி மங்கச் செய்யாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அதோடு தவறான புரிதல் மக்களிடம் சென்றடைந்து விட்டது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பொய்யான தகவலை மக்களிடம் கூறியது. முழுமையான புரிதல் இல்லாமல் அதைத் தமிழக மக்கள் நம்பியதன் காரணமாகத்தான் இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை என நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும், இந்தியா முழுவதும் இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.