மத்திய அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு!

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 30-ந்தேதி பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றார்

மோடி தலைமைலான அமைச்சரவையில் 57 மந்திரிகள் இடம் பெற்று உள்ளனர். 24 பேர் கேபினெட் மந்திரிகளாகவும், தனி பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக 9 பேரும் பதவியேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து மோடி தலைமையில் பதவியேற்ற மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

மந்திரி சபை கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மொத்தம் 87 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக​ கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சில்லறை வியாபாரிகளுக்கு, மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், மேலும் கால்நடைகளுக்கான தடுப்பூசி போடும் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தார்.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக்கூடாது, ஆடம்பரமான விழாக்களில் பங்கேற்க கூடாது,

மேலும் அமைச்சர்கள் அனைவரும் தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும். அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த விதமான செயல்களிலும் அமைச்சர்கள் யாரும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் தங்கள் பணிகளில் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.