வெடிவிபத்து – 2 பேர் உடல் சிதறி பரிதாப பலி.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்ரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பட்டாசு ஆலையில் எதிபாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிக மோசமாக சேதமடைந்தது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.