தல அஜித்துடன் இணைகிறாரா?! யாஷிகா ஆனந்த்!!

தல அஜித்துடன் எனக்கு நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கிங்காக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தனது அதிகப்படியான உழைப்பின் மூலம் உயர்ந்து நின்ற மாமனிதர். ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனது பின்னால் வைத்திருப்பவர் தல அஜித்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார். இந்நிலையில், நடிகை யாஷிகா சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர், ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.

தற்போது யாஷிகா ஆனந்த் “ஜாம்பி” என்ற படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகின்றார். இந்த “ஜாம்பி” படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் டுவிட்டரில் நேரலையில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றார். அப்போது தனது ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்து வந்தார்.

ரசிகர்கள் பலர் சாம்பி படம் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பல கேள்விகளை யாஷிகாவிடம் வினவினர். அதற்கு அவர் பதிலளித்தார். அப்போது பல ரசிகர்கள் தல அஜித் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “எனக்கு அவருடன் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது. நீங்க எல்லோரும் அவரிடம் போய் சொல்லுங்கள். அப்பொழுதாவது அவர் எனக்கு நடிக்க வாய்ப்பு தருகிறாரா என பார்ப்போம்” என அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு யாஷிகா கூறியிருப்பது, தல அஜித் மற்றும் யாஷிகா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.