மசாலா மோர் செய்வது எப்படி???

முற்காலத்திலிருந்தே உடல் சூட்டை குறைக்க மோர் குடிப்பது தான் வழக்கமாகும்.

வெயில் காலத்தில் மோர் குடிப்பதால் உடல் சூட்டை தணித்து குளுகுளு என மாற்றி விடும்.

தற்போது இந்த மசாலா மேரை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கெட்டித் தயிர் – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மோர் மிளகாய் – 1
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1/2
  • கறிவேப்பிலை – 3 இலை
  • இஞ்சி – 1/4 இன்ச்
செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் தயார்.