இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பிடித்திருக்கலாம் என்ற பீதியில் பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. CCTV கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண் காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் ரெக்காங் பியோ நகரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களில் பதி வான காட்சிகளை, தேர்தல் அதி காரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, அறைக்குள் புகை மண்டலம் போன்று காணப்பட்டது. இதனால் தீப்பிடித்திருக்க லாம் என சந்தேகித்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் வந்த உடனேயே அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை தேர்தல் அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.
அவர்கள் சந்தேகித்தபடி தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.கேமராவில், Night Vision Mode செட்டிங் செய்து வைத்திரு ந்தால், அந்த அறையின் ஓரங்களில் படிந்துள்ள தூசிப் படலமானது புகை போன்று கேமராவில் பதிவாகிஉள்ளது.
இதையடுத்து CCTV கேமராவில் செட்டிங்கை மாற்றியமைத்து, அறையை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.






