தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் அறையில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று காலை 11.30 மணி அளவில் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை பல்கலைக்கழக நிர்வாகிகள் அளித்துள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர் எம்ஏ இரண்டாம் ஆண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் யார் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.