கதறி அழுத குழந்தை!! வாட்ஸ் அப் மோகத்தால் தாய் செய்த கொடூர செயல்!!

கேரள மாநிலம் பட்டினங்காடு, கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு குழந்தை ஆதிஷா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி குழந்தையின் தாய் ஆதிரா அலறல் சத்தம் போட்டு அழுதுள்ளார்.

குலத்தின் மீது எந்த ஒரு சிறிய காயம் கூட இல்லாததால் சந்தேகம் ஏற்பட்டு உளுந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறி இறந்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஆதிராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், இரவு 12.30 மணிக்கு ஆதிரா செல்போனில் வாட்ஸ் அப் மூலம் தோழியிடம் தகவல் பரிமாறி கொண்டு இருந்ததாக கூறினார்.

அப்போது குழந்தை பசியில் பாலுக்கு அழுதது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று குழந்தையை தட்டி கொடுத்தேன். ஆனாலும் அழுகையை நிறுத்தாமல் மேலும் சத்தமாக அழுதது. இதனால் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தியடியே வாட்ஸ் அப்பில் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன் .

என்னை அறியாமலே குழந்தையின் வாயை நீண்ட நேரம் மூடியதால் குழந்தை இறந்தது என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.