தன்னை துபாய் பாரில் ஆபாசமாக ஆட வைத்து தனது பெற்றோர்..கதறி அழும் இளம் பெண்

தன்னை துபாய் பாரில் ஆபாசமாக ஆட வைத்து தனது பெற்றோர் பணம் சம்பாதித்ததோடு தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னையை சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. சமீபத்தில் தேர்தல் நடந்ததால், இதற்காக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விஜயலட்சுமி மீது ஒரு புகார் எழுந்துள்ளது. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது அந்த புகாரை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜயலட்சுமி மகள் கேண்டி கூறுகையில், என்னுடைய அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்-ல் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.

ஆனால் எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. அதனால அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். கடந்த 23ம் தேதி அன்று என் அம்மாவும், அப்பாவும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள்.

இதை அப்பகுதி மக்கள் எல்லாருமே பார்த்தாங்க. அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

என் அம்மா பொலிஸ் என்பதால் அவரை பற்றி யாரும் புகார் எடுக்க மறுக்கிறார்கள். இதனால என் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்