தானிய புட்டு செய்வது எப்படி?

தினமும் நமது குழந்தைகளுக்கு ஏதேதோ உணவுகளை கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு., நமது இல்லத்திலேயே சத்தான மற்றும் சுவையான தானிய புட்டை செய்து வழங்கினால் நமது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

தினை – 1 கிண்ணம்.,
வரகு – 1 கிண்ணம்.,
சாமை – 1 கிண்ணம்.,
கேழ்வரகு – 1 கிண்ணம்.,
குதிரைவாலி – 1 கிண்ணம்.,
சோளம் – 1 கிண்ணம்.,
கம்பு – 1 கிண்ணம்.,
சிறுதானிய புட்டு மாவு – 1 கிண்ணம்.,
தேங்காய் – ½ மூடி
நாட்டு சர்க்கரை – தே. அளவு
உப்பு – சிறிதளவு
ஏலக்காய் – 3 எண்ணம் (Nos).,
தண்ணீர் – தே. அளவு

செய்முறை:

குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை மற்றும் வரகு போன்றவற்றை தனித்தனியே வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக கொட்டி ஆறவைத்து அரைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

இந்த மாவை மூன்று மாதங்கள் வரை அடைத்துவைத்து பயன்படுத்தலாம். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காயை துருவி சேர்த்து கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ளவும்.

புட்டுமாவானது உதிரி, உதிரியாகவும், ஈர்ப்பத்துடனும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பின்னர் மாவினை ஒரு ஈரத்துணியை போட்டு மூடிவைக்கவும்.

இந்த மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும். வெந்த இந்த புட்டுமாவினை தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து உண்டால் சுவையான புட்டு தயார்.