ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பித்தது. இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் வின் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கி கொல்கத்தா அணி தற்போது ஆடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் லின், 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் தீபக் சாகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் 5 பந்துகளை சந்தித்து 6 ரன்களுக்கு, ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அடுத்தடுத்து இரண்டு நான்கு ரன்களை அடித்து சுறுசுறுப்பு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த கொல்கத்தா அணிக்கு, சுறுசுறுப்பை உண்டாக்கும் விதமாக ஆடுவார் என்று நினைத்த போதே, தீபக் சாஹர் வீசிய அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
மேலும், நிதிஷ் ராணா 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் 5 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி 4 விக்கெட்களை பறிகொடுத்து பரிதமாக ஆடி வருகிறது.
தற்போது அணியின் ஸ்கோர், OVER 15, RUN 75, WICKET 5