யாழில் 100 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு…!

யாழில் 200 மில்லியன் ரூபாய் நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் பணி சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா வாமதேவன் தலைமையில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உப்பு உற்பத்தி செய்வதற்கான பாத்திகள் அமைக்கப்பட்டு அங்கு 100இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், வங்கி முகாமையாளர் எம்.டேமியன் ரஞ்சித், பிரதேச கிராமிய வங்கி உதவித் திட்ட முகாமையாளர் கே.தியாகராஜா உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.