யுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன.
அக்குடும்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல தமிழ்ச் சமூகத்துக்கும் உண்டு.
இந்நிலையில் வாராவாரம் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் மூலம் பல உண்மை சம்பவங்கள் வெளிச்சமிட்டு காண்பிக்கப்படுகிறது.
இந்த வாரம் மூன்று பிள்ளைகளை இழந்து தனிமையில் வெறுமையோடு வாழும் தாயின் நிலை தொடர்பில் உறவுப்பாலம் நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.