பிரித்தானியாவில் வளர்ப்பு நாய் ஒன்று நோய்வாய்ப்பட்டு இறந்ததையடுத்து, அந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் நாய் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hertfordshireவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான அந்த நாய் லீஷ்மேனியாசிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
பிரித்தானியாவில் லீஷ்மேனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள முதல் நாய் இதுவாகும்.
Shih Tzu என்று பெயரிடப்பட்ட அந்த மூன்று வயது நாய், தொடர்ந்து மூன்று வாரங்களாக வாந்தி, பேதி மற்றும் தொடர் எடையிழப்பால் பாதிக்கப்பட்டது.
இந்த நாய் இதுவரை பிரித்தானியாவை விட்டு வெளியே சென்றதில்லை என்பதால், இன்னொரு நாயிடமிருந்து அதற்கு இந்த நோய் தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
நாய்களிடமிருந்து லீஷ்மேனியாசிஸ் நேரடியாக மனிதர்களுக்கு பரவாது என்றாலும், மணல் ஈக்கள் எனப்படும் ஒருவகை பூச்சிகள் இந்த நோயை மனிதர்களுக்கு பரப்ப முடியும்.
நோய் தொற்றிய நாயை கடித்த ஒரு மணல் ஈ மனிதர்களைக் கடித்தால், மனிதர்களுக்கு லீஷ்மேனியாசிஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.