குற்றவாளியை கைது செய்ய விரைந்த பெண் காவல் அதிகாரி.! இறுதியில் நேர்ந்த சம்பவம்.!

இந்த உலகில் பணியாற்றும் பெரும்பாலான நபர்களில் சிலர் தங்களின் பணிக்கு நேர்மையாகவும்., உண்மையாகவும் இருப்பது வழக்கம். அவர்களை நாம் என்னதான் உயர்த்தி பேசினாலும்., அவர்களை விட வாயில் வடை சுட்டு நல்ல பெயரை எடுப்பவர்கள் அதிகளவில் இருந்து கொண்டு அவர்களின் திறமையை மூடி மறைக்கின்றனர்.

அவ்வாறு கடமையில் தவறாது இருக்கும் நபர்கள் விடுமுறை நேரத்தில் இருந்தாலும்., அவர்களுக்குள் இருக்கும் வேலையின் மதிப்பின் மூலமாக அந்த காரியத்தை செய்கின்றனர். அந்த வகையில்., சுவீடன் நாட்டில் பெண் அதிகாரி ஒருவர் செய்த செயல் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

சுவீடன் நாடுகளில் நிர்வாண நீராவி குளியல் என்பது அரசாங்கத்தால் அனுமதியளிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த வகையில் சம்பவத்தன்று பெண் காவல் அதிகாரி நீராவி குளியலில் ஈடுபடுவதற்கு அங்குள்ள நீராவி குளியல் நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அவர் குளியலறைக்குள் சென்ற சமயத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவன் அங்கு நீராவி குளியலை முடித்துக்கொண்டு கிளம்புவதற்கு தயாராகியுள்ளான். இதனை கண்ட அந்த பெண் அதிகாரி., எந்த விதமான சலனமும் கொள்ளாமல்., நிர்வாணத்துடன் குற்றவாளியின் அருகே துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளார்.

இந்த தகவலானது அங்குள்ள ஊடகங்களுக்கு தெரியவரவே., இந்த விஷயத்தை வைரலாக்கினார். இதனை அறிந்த பல நாடுகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும்., அந்த பெண்மணியின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.