முக்கிய தலைவரை நீக்கிய தினகரன்! தொண்டர்கள் குழப்பம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தவரும் முன்னணி தலைவருமான விபி கலைராஜனை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தென் சென்னையின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த பி பி கலைராஜன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் அதனால் அவரை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வகித்து வந்த தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை சுகுமார் பாபு என்பதற்கு வழங்கி நியமன உத்தரவையும் தினகரன் வழங்கியுள்ளார். நீக்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.