நேற்று காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம், கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்ற 6 நிமிடங்களுக்குள், தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது.
இதனால் சந்தேகமடைந்த அந்நாட்டு அரசு அதிகாரிகள், விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று உடனடியாக, தேடுதல் வேட்டையில் இறங்கினர், அப்போது, அந்நாட்டின் தலைநகர் அடிடாஸ் அபாபாவின் அருகே, பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடைக்கும் செய்தி கிடைக்கவே, உடனடியாக சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த விமானத்தில் பயணித்த149 பயணிகள், விமானிகள், 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். பின் அது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. முதல் கட்டமாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி உத்தரவிட்டு, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில், சீனாவிலும் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு, வர்த்தகரீதியிலான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.