தற்கொலை செய்துகொண்ட கணவர்! மனைவியிடமே சொல்லாமல் மறைத்த உறவினர்!

இந்தியாவைச் சேர்ந்த நபர் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Shibin Thomas. இவர் துபாயில் இருக்கும் GEMS Jumeirah கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை இவர் கல்லூரியின் ஸ்டேஷ்னரி பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டனர். மேலும், உடனடியாக கல்லூரி மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பபட்டனர்.

அதன் பின் அங்கிருக்கும் அவரின் உறவினர் சிஜோவிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பேயில்லை, அவன் என்னை கடைசியாக சந்தித்த போது கூட அவனிடம் எந்த பிரச்சனையும் இருப்பது போன்று தெரியவில்லை.

இதனால் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

மேலும் Shibin Thomas-ன் மனைவி சுற்றுலா விசாவில் தான் சமீபத்தில் துபாய்க்கு வந்துள்ளார். அவர் உறவினர் சிஜோவின் வீட்டில் தங்கியுள்ளார்.

ஆனால் சிஜோ அவரிடம் கணவர் இறந்ததைப் பற்றி கூறவே இல்லை எனவும், விபத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் கணவன் இறந்த செய்தியை கேட்டால் அவர் தாங்கமாட்டார் என்பதற்காக இப்படி கூறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இறந்த Shibin Thomas-க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.