சென்னையில் வாலிபர் ஒருவர் தனக்கு திருமணம் செய்துதர இருந்த பெண்ணின் தாயார் திடீரென்று மறுத்ததால் அரை கொலை செய்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி ரேவதி (45). சில ஆண்டுகளுக்கு முன் ராமசந்திரன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ரேவதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து பிள்ளைகளை படிக்கவைத்து வருகிறார்.
இந்தநிலையில் வேலை முடிந்து நேற்றிரவு 8 மணியளவில் ரேவதி வீடு திரும்பியுள்ளார். கிண்டி வண்டிக்காரன் தெருவில் அவர் வந்தபோது வாலிபர் ஒருவர் வழிமறித்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாலிபர், ரேவதியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வினோத் என்றவாலிபர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், ரேவதியின் மூத்த மகள் சவிதாவுக்கும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) வினோத்துக்கும் இரு வீட்டாரின் சம்மத்துடன், திருமணம் நிச்சயம்செய்துள்ளனர். இந்நிலையில் வினோத்தின் நடவடிக்கைகள் சரி இல்லை ரேவதி திருமணத்தைநிறுத்தி உள்ளார்.
இதனால் விரத்தி அடைந்த வினோத் தொடர்ந்து சாவிதாவை தொந்தரவு செய்துவந்துள்ளார். இதனால் ரேவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வினோத் ரேவதியிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ள பொலிசார் வினோத் ஏற்கனவே ரெக்காட் செய்த வீடியோவில் சாவிதா…சாவிதா உன்னை என்னால மறக்க முடியவில்லை என்று அழும் காட்சியை கைபற்றி உள்ளனர். மேலும்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.