பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி ஒருவர் சிக்கிய நிலையில் அவர் இன்று பிற்பகலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் அவர் மீட்கப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலால் இருநாடுகளுக்குடையே போர் ஏற்படும் அளவிற்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி இந்திய விமானியை பாகிஸ்தானியர்கள் அடிக்கும் வீடியோவும் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின் அமெரிக்க இராணுவம் அவரை மீட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அவரை விடுதலை செய்வதற்கு முக்கிய காரணம் உலகநாடுகள் கொடுத்த அழுத்தம் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் கூறப்படுகிறது.
அவரை கையில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். ஆனால், பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பியது.
ஆனால் அபிநந்தன் மீட்டுக் கொண்டு வருவதற்காக எந்தவொரு சமரசமும் பேசப்படவில்லை. இது இந்திய அரசின் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.
இந்திய விமானியை மீட்பதில் சர்வதேச நாடுகளின் நெருக்கடியை பாகிஸ்தானுக்கு கொடுப்பதில் இந்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அபிநந்தன் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்த வீடியோ, ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா புரிய வைத்துள்ளது. அவர்கள் இந்தியாவை அவமானப்படுத்த வெளியிட்ட இந்த வீடியோ பாகிஸ்தானுக்கு ஒரு பின்னடைவாக மாறியது
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபிநந்தன் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அரபு நாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தானுக்கு நெருக்கடி தருமாறு கேட்டுக்கொண்டார்
இதன் நடுவே தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரைவில் ஒரு நல்ல செய்தி வெளி வர போகிறது என்று சூசகமாக தெரிவித்தார்.
டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், அபிநந்தனை விடுதலை செய்வதாக இம்ரான் கான் அறிவித்தார்.
இப்படி ஒட்டுமொத்தமாக உலக நாடுகள் கொடுத்த அழுத்தம், இந்தியாவின் ராஜ தந்திர முயற்சி ஆகியவற்றின் காரணமாகவே அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.