ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசு தரப்பிலும் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி பதிலடி கொடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகளை உயிருடன் பிடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு தரப்பும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால், மக்கள் யாரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






