பிரபல நடிகர் ஆர்யாவிற்கும் நடிகை சாயிஷாவிற்கும் அடுத்த மாதம் திருமண நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் ஆர்யா, ‘கஜினிகாந்த்’ என்ற படத்தில் சாயிஷா என்கிற புதுமுக நாயகியுடன் நடித்ததன் மூலம் காதல் வலையில் விழுந்தார்.
அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கடந்த வாரம் முழுவதுமே செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன.
Happy Valentines Day! ❤️ pic.twitter.com/5sQfQJARGf
— Sayyeshaa (@sayyeshaa) February 14, 2019
ஆனால் இந்த விவகாரம் பற்றி இருதரப்பினரும் எந்தவித தகவலும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தனர்.
இதற்கு காரணம், சாயிஷாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும், “யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள், ஆர்யா மட்டும் வேண்டாம்” என அறிவுரை வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் ஆர்யா – சாயிஷா திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான திகதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.