மருத்துவர்கள் செய்த அபூர்வ செயல்! நடந்த அதிசயம்.!

இங்கிலாந்தை சேர்ந்தவர் பெத்தான் சிம்சன். 26 வயது நிறைந்த இவர் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பமடைந்து 20 வாரங்கள் கடந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக செல்ம்ஸ்போர்டு பகுதியில் உள்ள ப்ரூம்பீல்ட் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , கருவில் இருந்த குழந்தையில் தலை சாதாரணமாக குழந்தைகளுக்கு உள்ளது போல் அல்லாமல் மாறி இருப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தாய் பெத்தான் மற்றும் கருவில் இருந்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது, குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது..

இதனை தொடர்ந்து கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அழிப்பது ஆபத்தானது என்ற நிலையிலும் சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டால், குழந்தை பிறந்தவுடன் அது நடப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தாய் பெத்தானிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெத்தான் மற்றும் அவருடைய கணவர் கியுரோன் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டு வந்த இந்த அறுவை சிகிச்சையை லண்டன் மருத்துவனையில் மேற்கொண்டனர். மேலும் லண்டன் மருத்துவர்கள் பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து இதில் ஈடுபட்டனர்.

பின்னர் அறுவை சிகிச்சையின் போது குழந்தை பத்திரமாக கருப்பையிலிருந்து வெளிஏ எடுக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் குழந்தையை மீண்டும் கர்ப்பப்பையிலேயே வைத்து தைத்தனர்.

இந்த அறுவை சிகிச்சையானது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.