நிதி அமைச்சின் அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு அமைய, இலங்கையில் எரிபொருள் விலைப்பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விலை சூத்திரத்திற்கான குழு இன்றைய தினம் பிற்பகல் கூடி எரிபொருள் விலையில் மேற்கொள்ளவுள்ள மாற்றம் தொடர்பில் தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஜனவரி மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போது சிங்கப்பூர் சந்தையில் விலை அதிகரித்தே காணப்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.