“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின்; “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைகள் பூர்த்தி…! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின் “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைகள் பூர்த்தி…! (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு “வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின்” நிதி உதவியுடன், புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, முன்னாள் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களினால் (05.12.2018) ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, ஒருமாதத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலம் வரை மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தொடரப்பட்டு இருந்தது நீங்கள் அறிந்ததே…

இதனைத் தொடர்ந்து சுமார் 50குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியான, பெருங்காட்டு சந்தியில் இருந்து, “நண்பர்கள் விளையாட்டுக் கழக” மைதானம் வரையான இறுப்பிட்டி செல்லும் “மானாவெள்ளை வீதி” (அடைகாத்தகுளம்) பகுதி வீதிக்கான “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இருவாரத்துக்கு முன்னர் செயற்படுத்தி இருந்தோம்.

இந்த “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைக்கான முழுச்செலவையும், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் சூரிச் மாநிலத்தில் வதியும் சிவாஸி எனும் திரு.ஆறுமுகம் பிரசாத் குடும்பத்தினரும், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் புர்கடோர்ப் மாநில ஒபேர்புர்க் பகுதியில் வதியும் “ஒபேர்புர்க் குமார்” எனும் “சுவிஸ் ஒன்றிய” ஆலோசனை சபை உறுப்பினரான திரு.வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் குடும்பத்தினரும் பொறுப்பேற்று இருந்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின் “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை”யின் தொடர்ச்சியாக “கமலாம்பிகை வித்தியாலயம் முதல் புங்கடிப் பகுதி” வரையானதும், மற்றும் “மடத்துவெளி பிரதான வீதியில் இருந்து, மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயம் வரையான” வீதிக்கும் “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” நேற்றையதினம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிய தருகிறோம்.

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதி உதவியுடன், “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் நேற்றையதினம்நடைபெற்ற நிகழ்வில் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி. த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவு உலக மையத் தலைவர் “சமூக ஆர்வலர்” திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (அண்ணா சின்னத்தம்பி) ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

எமது வேண்டுகோளை சிரமேற்கொண்டு கடமையாற்றிய திரு.இ.இளங்கோவன் அண்ணர் அவர்களுக்கும், “நிதி இல்லாவிடின் எதுவும் நடவாது” என்பதை உணர்ந்து, நாம் கேட்கமுதலே இதுக்குரிய முழுமையான நிதிப் பங்களிப்பையும் வழங்கிய “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபைக்கும், “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபைக்கு, ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்திய திரு.அ.சண்முகநாதன் (கண்ணாடி ஐயா) அவர்களுக்கும்,

குறிப்பாக பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, அல்லும்பகலும் செயல்பட்ட திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மாஸ்ரர், திருமதி.த.சுலோசனாம்பிகை, திரு.பிள்ளைநாயகம் சதீஷ் ஆகியோருக்கும், பலவழிகளிலும் உதவிகள் புரிந்த வேலணை பிரதேச சபை அதிகாரிகளுக்கும், மின்சாரசபை அதிகாரி திரு.நிசாந்தன் மற்றும் மின்சாரசபை (திரு.துஷ்யந்தன் உட்பட்ட) ஊழியர்களுக்கும்,

பல இடையூறுகள், பழிச்சொற்களை தாங்கிக் கொண்டு, சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தை சரியான முறையில் வழிநடத்தி, நிர்வாகசபையின் துணையுடன் “எடுத்த காரியத்தை” சிறப்பாக செய்து முடித்த “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும், “எவ்விடர் வரினும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க” துணை நின்ற அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பிலும், உலகெங்கும் வாழும் “புங்குடுதீவு மக்கள்” சார்பிலும்” நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

(**குறிப்பு:- நேற்றையதினம் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்த போதிலும், இதனை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட வேண்டுமெனும் நோக்கில், “சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று, பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும், இந்த வீடியோவை எடுத்துத் தந்து உதவிய திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (அண்ணா சின்னத்தம்பி) அவர்களுக்கும், -புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரத்தை சேர்ந்த திரு.பிள்ளைநாயகம் சதீஷின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பொறுப்பின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது..- அவருக்கு உதவி புரிந்த திருமதி.த.சுலோசனாம்பிகை, வாகன ஓட்டுநர் திரு.சுமன் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.)

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
08.02.2019