இரட்டையர்களை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!

இரட்டையர்களை இளம் பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மோட்சீ என்ற நபர் இச்சம்பவம் குறித்த தகவலை புகைப்படங்களுடன் டுவிட்டர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இளம் பெண்ணொருவர், இரட்டையர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமண நிகழ்வின் போது மூவரும் அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி மிருத்தின் தோல்களை வைத்து தைத்த உடைகளை அணிந்திருந்தனர்.

இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

மணமக்களின் பெயர்கள் மற்றும் இன்னபிற விபரங்கள் தெரியவில்லை.

இரட்டையர்களை, இளம் பெண் திருமணம் செய்து கொண்டதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.