11 வயதான சிறுமியை சீரழித்த 70 வயது தாத்தா!

மும்பையில் குர்கான் பகுதியில் 70 வயது தாத்தா ஒருவர் 11 வயதான சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். தாயின் தனது சொந்த பணியின் காரணமாக வேறு இடத்தில் இருந்துள்ளார்.

இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்த 70 வயது முதியவருடன் சிறுமியின் தந்தை இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

இந்நிலையில், இரவு நேரம் மதுஅருந்திவிட்டு தந்தை அசந்து தூங்கிவிடவே இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாத்தா வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறு பலமுறை செய்துள்ளார். இதனால் சிறுமி தனது தாய்க்கு போன் செய்து, தான் மிகவும் பயந்துபோய் உள்ளதாகவும் உடனே வரும்படி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தாய், நடந்தவை குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

Section 376 கீழ் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.