திருமணம் முடிந்து கணவருடன் செல்லும் rukhsati நிகழ்வின் போது கண்ணீர் சிந்தியது எதற்காக என்பது குறித்து இஷா அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானின் மகள் இஷாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது மணமகளை தனது கணவருடன் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கும் rukhsati நிகழ்வு நடைபெற்றது. அப்போது, இஷா அம்பானி கண்ணீர் சிந்திய வீடியோ வைரலானது.
இந்நிலையில் கண்ணீர் சிந்தியது எதற்காக என்பது குறித்து இஷா அம்பானி தற்போது அளித்துள்ள பேட்டியில், அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். நான் செல்லும்போது என்னை சுற்றியிருக்கும் அனைவரும் அழுதார்கள்.
எனது பெற்றோரும் அழுதார்கள். இதனைப்பார்க்கும்போது எனக்கும் உணர்ச்சிமிகுதியில் கண்ணீர் வந்தது என கூறியுள்ளார்.