இட்லி போண்டா..

சாப்பிட்டு மீந்து போன இட்லியை வைத்து இனி உப்மா மட்டுமே செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. இட்லி போண்டாவும் செய்யலாம். வாருங்கள் எப்படி செய்வதென பார்ப்போம்.

இட்லி போண்டா செய்ய தேவையான பொருள்கள் :

கடலைமாவு – 4 மேஜைக்கரண்டி
இட்லி – 5
எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி

இட்லி போண்டா செய்முறை :

  1. வேகவைத்த இட்லியாக இருந்தால் நன்றாக ஆறிய பின்னர் உபயோகிக்கவும். இட்லியை நன்றாக பிசைந்து தூளாக வைத்து கொள்ளவும். பின் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி தூள்கள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
  4. நன்றாக இருபுறமும் வேகுமாறு திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான இட்லி போண்டா ரெடி!!