வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனக்கு திருமணம் செய்து வைக்காததால் மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
ஜானகிராமன் பொலிசாரிடம் கூறியதாவது, எனக்கு 25 வயதில் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் திருமணம் செய்துவைக்கவில்லை. தற்போது எனக்கு 38 வயதாகிவிட்டது.
சொத்தை முழுவதுமாக அபகரிக்கத் திட்டமிட்டு, எனது அண்ணன், திருமணம் செய்து வைக்காமல் என்னைச் சாமியாராக்க முயற்சி செய்கிறார். நானே, பெண் பார்த்து திருமணம் செய்து கொள்கிறேன் என்றாலும் மறுக்கிறார்கள்.
இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.