மொரட்டுவ – கொரலவெல்ல பிரதேசத்தில் கல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரலவெல்ல – பெரேரா மாவத்தையினை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு ள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.