திருமணமான 7 மாதங்களிலேயே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

ஆவடி அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் முருகன். 29 வயது நிறைந்த இவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மாதவி. இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சமீபகாலமாக முருகன், தனது மனைவி மாதவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவி, செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்த முருகன் யாருடன் பேசுகிறாய்? என்று கேட்டு மனைவி மாதவியிடம் பிரச்சினை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாதவி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையில் இருந்த மாதவியை மீட்டு குடும்பத்தார்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர் .

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 7 மாதங்களிலேயே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.