நடு ரோட்டில் செய்த காரியம்..? உறைந்து போய் நின்ற பொதுமக்கள்.!

கேரள அரசு பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கம்பம் அருகே கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பொன்மலைச்சாமி. இவருக்கு 45 வயதாகிறது.. அ.தி.மு.க. பிரமுகராக செயல்பட்டு வரும் பொன்மலைச்சாமி கூடலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து குமுளிக்கு கேரள அரசு பஸ் வந்தது.

கூடலூர் பஸ் நிலையத்தில் நின்றபோது திடீரென பொன்மலைச்சாமி டிரைவரை பார்த்து சத்தம்போட்டார். மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆவேசமாக பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கினர். அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.காவல் ஆய்வாளர் ஷாஜகான் வழக்குப்பதிவு செய்து பொன்மலைச்சாமியை கைது செய்து கல் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.