தற்போது உள்ள பெண்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை உபயோகித்து ஒரு வாரத்திலே முகத்தை வெண்மையாக்கி கொள்வது வழமையாகி விட்டது.
ஆனால் இது பல பக்கவிளைவுகளை முகத்திற்கு ஏற்படுத்தி விடுகின்றது. நாளாடைவில் முகத்தையே அசிங்கமாகி விடுகின்றது.
இதற்கு நாம் இயற்கை முறையிலான பொருட்களை உபயோகிப்பதே சிறந்ததாகும்.
கடலை இதில் உள்ள வைட்டமின் சி, ஏ முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி இளமையாகவும் பொலிவாகவும் வைக்கிறது. மேலும் முக சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, கருமையை போக்குவதற்கு ஒரு எளிய வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.
தேவையானவை
- பால் 2 ஸ்பூன்
- கடலை 10
- தேன் 1 ஸ்பூன்
செய்முறை :
கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும்.
இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் முகம் இயற்கையாகவே பளபளப்பான வெண்மையை பெறும்.