அழுதுகொண்டிருந்த மகன்: சுவற்றில் அடித்து கொடுரக்கொலை செய்த தாய்!

டெல்லியில் மகன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் சுவற்றில் அடித்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி Bijwasan பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருடைய கணவர் சூர்யா பிரதாப் சிங். இவர்களுக்கு 6 வயதில் யுவங் சிங் என்ற மகன் இருந்தான்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராணி கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது நரேந்திர குமார் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் நாளடைவில் ராணியின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டதால், குழந்தை பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டது எனக்கூறி நரேந்திர குமார், சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது எனக்கூறி, சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த சூர்யா பிரதாப், தன்னுடைய மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுவனின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

உடனே ராணி மற்றும் நரேந்திர குமாரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, அழுதுகொண்டிருந்ததால் சுவற்றில் அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளார்.