பிரபல துணிக்கடை, நகைக்கடையை மூடி சீல் வைத்த அதிகாரிகள்.!!

கும்பகோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை, மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை கட்டிடத்தை மூடி அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேம்பாலம் அருகே, தமிழகத்தில் பல கிளைகளை கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக்கடை மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நான்கு மாடி கட்டடம் கட்டி திறக்கப்பட்டது.

இந்த துணிக்கடையில், கார் நிறுத்துமிடம் அனுமதி பெற்ற இல்லை என்று செல்வராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இது குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி , இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி, இந்தக்கட்டிடத்திற்கு சீல் வைக்குமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சற்றுமுன் கும்பகோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை, மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை கட்டிடத்தை மூடி, கும்பகோணம் கோட்டாட்சியர் அவர்கள், சீல் வைத்துள்ளார்.