சட்டப்பேரவை முன் போலீசார் குவிப்பு.!! கூண்டோடு கைது.!!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், கடந்த ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஜனவரி 1 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, சேமித்து வைக்க மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது . பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் (8.1.2019/12.30 AM) சென்னை சட்டசபை வழக்கத்தை முரட்டுகிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பினர் பேரணியாக திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைவே, போலீசார் அவர்களை கைது செய்து உள்ளனர். இதனால் சட்டப்பேரவை அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கியது.

பிளாஸ்டிக் தடைக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு தரும் வேலையில், வணிகர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.