அபிராமியை மிஞ்சிய கொடூரம்.!! மாமனாருடன் கொண்ட தகாத உறவு.!! குழந்தைகளுடன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!!

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள கணியம்பாடி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தை சார்ந்தவர் தனசேகர். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜெயந்தி. ஜெயந்தியின் மாமனாரின் பெயர் கோபாலகிருஷ்ணன்.

தனசேகர் – ஜெயந்திக்கும் ஸ்ரீலட்சுமி மற்றும் மகாலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்., ஜெயந்திக்கும் அவருடைய மாமனாரான கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகாத பழக்கம் இருந்துள்ளது.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் அடிக்கடி தகாத பழக்கத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் ஜெயந்தி மற்றும் குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இல்லத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.

ஒன்றும் அறியாத ஜெயந்தியின் கணவர் வேளாங்கண்ணிக்கு சென்றுவர அனுமதி அளித்தவுடன்., கடந்த 27 ம் தேதியன்று ஜெயந்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஜெயந்தியின் குழந்தைகளை அழைத்து கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்த அவர்கள் நாட்களை கழித்துள்ளனர்., இந்நிலையில்., இருவரும் சென்று நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பியும் வரவில்லை., எந்த வித தொடர்பும் இல்லாததால் பதறிய ஜெயந்தியின் கணவர் மற்றும் உறவினர்கள் அச்சமடையவே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கிய இவர்கள் மகாலட்சுமியை தலையணையை அழுத்திவிட்டு கொலை செய்து பின்னர் அங்கிருந்து ஆந்திராவிற்கு சென்றுள்ளனர்.

ஆந்திரமாநிலத்தில் உள்ள விஜயவாடாவிற்கு சென்று ஜெயந்தி-கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெயந்தியின் மகள் ஸ்ரீலட்சுமி மூவரும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்., தகாத உறவின் காரணமாக பெற்ற மகளை கொலை செய்து தனது மாமனாருடன் இரயில் முன்பாய்ந்து மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.