உலககோப்பைக்கு தகுதி பெறாத இலங்கை: ரசிகர்கள் அதிர்ச்சி….

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி 20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பினை இலங்கையும், வங்கதேசமும் இழந்துள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான டி 20 அணிகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கை 9 வது இடத்திலும், வங்கதேசம் 10 வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் உலகக்கோப்பைப் போட்டிகளில் நேரடியாக பங்கேற்க முடியும் என ஐசிசி  அறிவித்துள்ளதால், 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி 20 போட்டித் தொடரில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இழந்துள்ளன.

இந்நிலையில் இரண்டு அணிகளும் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் தகுதி சுற்றுப்போட்டிகளில் விளையாடி, அதில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து தகுதிப் பெற்றால் மட்டுமே உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொள்ள முடியும். மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பெருமை, மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெற்று சாம்பியனான இலங்கை அணி, தற்போது உலககோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெறாமல் போனது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.