நியூயார்க்கில் களைகட்டும் புத்தாண்டு குஷி!

2019 புது வருடத்தை வரவேற்கும் வகையில், உலகின் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டம், அமெரிக்காவினநி யூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ளது.

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதை முன்னிட்டு, நியூயார்க் நகரம் இந்த புத்தாண்டை உலகின் மிகப்பெரிய புத்தாண்டாக கொண்டாடவுள்ளது.  அதற்காக வரும் 31ம் தேதி மாலை 6 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்க உள்ளதையடுத்து, இந்த கொண்டாட்டத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2019ம் ஆண்டை வரவேற்கும் விதமாக நடக்கும் இந்த கொண்டாட்டத்தை, உலகம் முழுவதும் உள்ளவர்கள் கண்டுகளிக்க நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகம் முழுவதுக்ம் இருந்து 100 கோடிக்கும் அதிகமானோர், இந்த கொண்டாட்டத்தை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த புத்தாண்டு கொண்டாட்ட தருணத்துக்காக டிசம்பர் 31ம் தேதி மாலௌ 3 மணி முதலே, டைம்ஸ் சதுக்கம் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட உள்ள நிலையில், இசை நிகழ்ச்சிகள மற்றும் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்ட முறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவில் புத்தாண்டு பிறப்பதற்கு முன், கவுன் டவுண் பொருத்தப்பட்ட புத்தாண்டு பந்து பறக்க விடப்பட உள்ளது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகளுடன் பந்து சிதறி, அதிக் இல்ல்ருந்து வண்ண வண்ண காகிதங்கள் சிதறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் கொண்டாட தயாராகி விட்டது உலகம்!